ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில், நேற்று சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவம், சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்த தாக்குதலில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் விவரம் தெரியவந்துள்ளது. மருத்துவர் பரமேஸ்வரன் (31) (சென்னை), சந்துரு(83), பாலச்சந்திரா(57) ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.